உயர் தேசிய டிப்ளோமா ஆங்கில கற்கை (HNDE) நெறிக்கான பரீட்சை ஒத்திவைப்பு

நாளை (29) நடைபெறவிருந்த உயர் தேசிய டிப்ளோமோ ஆங்கில கற்கை (HNDE) நெறிக்கான பரீட்சை ,ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார துண்டிப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சைக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கேட்டு கொண்டதற்கு அமைவாக, பரீட்சையை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எமது செய்தி பரிவுக்கு தெரிவித்தார்.

K.Sayanthiny

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.