ரூ.1.5 லட்சம் பணத்தை தொலைத்த வளர்ப்பு நாய்| Dinamalar

திருப்பதி : ஆந்திராவில், வளர்ப்பு நாய் பணப்பையை வாயில் கவ்விக் கொண்டு ஓடி, அதை தொலைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள நாச்சினபள்ளி கிராமத்தில், ஆடு மேய்த்து வருபவர் செராலா. இவர், இரு நாட்களுக்கு முன் சந்தைக்கு சென்று ஆடுகளை விற்று, 1.50 லட்சம் ரூபாயுடன் வீட்டிற்கு வந்தார். பணப்பையை கட்டிலில் வைத்து விட்டு குளிக்க சென்றார்.

அப்போது அங்கு வந்த அவரின் வளர்ப்பு நாய், கட்டிலில் இருந்த பணப்பையை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது. குளித்து விட்டு திரும்பிய செராலா, கட்டிலில் வைத்த பணப்பையை காணாமல் பதறி தேடினார்.

அப்போது அக்கம்பக்கத்தினர், அவருடைய நாய் ஒரு பையை கவ்விக் கொண்டு ஓடியதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் பல இடங்களில் தேடியும் பணப்பை கிடைக்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.