அகிலேஷின் கிண்டலுக்கு மாயாவதி பதில்; கனவில்தான் பிரதமராக முடியும்: மாயாவதிக்கு துணை முதல்வர் பதிலடி

லக்னோ: அகிலேஷ் யாதவின் கிண்டலுக்கு மாயாவதி பதில் அளித்த நிலையில், அவருக்கு உத்தரபிரதேச துணை முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை பாஜக ஜனாதிபதியாக்குமா? இல்லையா? என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் அவரை கிண்டல் செய்தார். அகிலேஷின் கிண்டலுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மாயாவதி, ‘நாட்டின் பிரதமராகவும், மீண்டும் ஒரு முறை முதல்வராகவும் விரும்புகிறேன். ஆனால் ஜனாதிபதியாகும் கனவு எனக்கு இல்லை’ என்று கூறினார். இவர்களின் கருத்து மோதலுக்கு மத்தியில் பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான கேசவ் மவுரியா கூறுகையில், ‘மாயாவதி கனவில்தான் பிரதமராக முடியும். ஆனால் அவரது தைரியத்தை பாராட்ட வேண்டும். ஜாதியின்  பெயரால் மக்களை பிரித்து அரசியல் செய்ய முடியாது என்பதை உத்தரபிரதேச மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். ஒலி மாசுபாட்டைக் குறைக்க அனைத்து வழிபாட்டு தலங்களிலும் உள்ள ஒலி பெருக்கிகள் அகற்றப்படுகின்றன. இத்திட்டத்தை அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.