அரசு ஊழியர்களுக்கு இப்படியொரு செக் – அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!

அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும் என, அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை
தாலிபான்
அமைப்பினர் கைப்பற்றினர். தாலிபான் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, சமீபத்தில் ஹெராத் மாகாணத்தில் உள்ள சலூன் கடைகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானிய ஆடவர்களில் அதிலும் குறிப்பிடும்படியாக மாணவர்களுக்கு மேற்கத்திய தாக்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மேற்கத்தியர்களை போன்று முடிகளை வெட்டக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

9 மனைவிகளுடன் அட்டவணை போட்டு உல்லாசம் – கணவனின் ஜாலி வாழ்க்கை!

அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவிகள் வகுப்பறையில் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என்றும் தாலிபான் எச்சரித்து உள்ளனர். மேலும், அரசு பணியிலுள்ள ஆடவர்கள் முழு அளவில் வளர்ந்த தாடி வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். ஹெராத் மாகாணத்தில் துணி விற்பனை செய்யும் கடைகளில் வைக்கப்படும் பொம்மைகளுக்கு தலை இருக்க கூடாது என்றும், இது ஷரியா சட்டத்திற்கு எதிரானது என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பல்க் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவிகள் ஹிஜாப் அணியாமல் சென்றதாக புகார் எழுந்த நிலையில், அந்த பள்ளியை தாலிபான்கள் மூடினர். மேலும் கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.