முடிவுக்கு வந்த போராட்டம் …இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்வீட்..!

விஜய் சேதுபதி
மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த படம்
காத்துவாக்குல ரெண்டு காதல்
. 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி,
நயன்தாரா
,
அனிருத்
என அதே வெற்றிக்கூட்டணியோடு துவங்கப்பட்ட திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

மேலும் இந்த வெற்றி கூட்டணியில் நடிகை சமந்தாவும் இணைந்தார். இந்நிலையில் சமீபத்தில வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

சூர்யா & பாலா திரைப்படம்…பரவும் வதந்தியால் வருத்தத்தில் ரசிகர்கள்..!

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேபோல் விஜய் சேதுபதியின் சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இருந்த விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தந்துள்ளது.

இந்த பதிவை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

முக்கோண காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, நயன்தாரா,
சமந்தா
என அனைவரும் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் படம் வெளியாவதற்கு பிறகு விக்னேஷ் சிவன் தற்போது ஒரு பதிவை போட்டுள்ளார்.

அவர் பதிவிட்டவாறு, படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நன்றி. நீண்ட பல போராட்டங்களுக்கு பிறகு இப்படத்தை திரையில் கொண்டுவந்ததற்கான பலனை ரசிகர்களின் புன்னகையில் கண்டு மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். எனவே விரைவில் இப்படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடதக்கது.

விஜய் பட வசனத்தை மேடையில் பேசிய ஜீவா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.