கோவிட் தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணம்: மோடி பெருமிதம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கோவிட் தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன்னுதாரணமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

latest tamil news

இன்று (ஏப்.,29) டில்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த சீக்கிய குழுவினர் கூட்டத்தில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது, ‘ உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களை நான் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன். கனடா நாட்டின் இந்திய தூதுவர்களாக சீக்கியர்கள் உள்ளனர். சீக்கிய குருக்கள் மக்களுக்காக சேவை செய்வதையே விரும்பினர்.

latest tamil news

கோவிட் பரவல் நேரத்தில் இந்தியா அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்று சிலர் நினைத்தனர். ஆனால், கோவிட் தடுப்பூசி செலுத்தியதில் உலகத்திற்கே இந்தியா முன் உதாரணமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா உலகிலேயே தனித்துவத்தை பெற்றுள்ளது,’ இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.