புதிதாக 3,377 பேருக்கு தொற்று- கொரோனா பாதிப்பு 3வது நாளாக உயர்வு

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் கடந்த 24 மணி நேரத்தில் 3,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 26ந் தேதி பாதிப்பு 2,483 ஆக இருந்தது. மறுநாள் 2,927 ஆகவும், நேற்று 3,303 ஆகவும் இருந்த நிலையில் இன்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 1,490 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அரியானாவில் 580, கேரளாவில் 347, உத்தரபிரதேசத்தில் 218, மகாராஷ்டிராவில 165, கர்நாடகாவில் 154, மிசோரத்தில் 99 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 176 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கர்நாடகாவில் விடுபட்ட மரணங்கள் 42, கேரளாவில் விடுபட்ட 14 மரணங்கள் மற்றும் நேற்று மகாராஷ்டிராவில் 2, டெல்லியில் 2 பேர் என மேலும் 60 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த 2,496 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரத்து 622 ஆக உயர்ந்தது.

தற்போது 17,801 பேர் சிகிச்சிசையில் உள்ளனர். இது நேற்று முன்தினத்தைவிட 821 அதிகம் ஆகும்.

இதற்கிடையே நேற்று 22,80,743 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 188 கோடியே 65 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நாடு முழுவதும் இதுவரை 83.69 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,73,635 மாதிரிகள் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.