மதுபோதையில் ஓலா ஓட்டுநரை தாக்கி கார் கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது

மதுபோதையில் ஓலா கார் டிரைவரைத் தாக்கி கார் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கிய 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். 
மதுரவாயில் வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியன்(35). இவர் ஓலா ஆப் நிறுவனத்தில் கார் ஒட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது காரை ஓலா ஆஃப் மூலம் சிலர் புக் செய்துள்ளனர். பின்னர் புக்கிங் செய்ததை உறுதிப்படுத்த கால் செய்துள்ளனர். அப்போது ஓலா ஆப் மூலம் புக்கிங் செய்த நபர்கள் மதுபோதையில் இருப்பதுபோல் பேசியுள்ளனர். இதனால் புக்கிங் செய்ததை உடனடியாக அந்த ஓட்டுநர் ரத்து செய்துள்ளார்.
image
இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மீண்டும் முனியனை தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி கார் ஓட்டுநர் இருந்த இடத்திற்கே சென்று அவரை சரமாரியாக தாக்கி கார் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் ஓட்டுநரை தாக்கிய குற்றவாளிகளை தேடிவந்தனர்.
image
இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட மனோஜ்(22) மெல்வின் சாமுவேல்(32) ரவிக்குமார் (34) மற்றும் கார்த்தி(31) ஆகிய நான்கு நபர்களை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே காவல் நிலையம் முன்பு 50க்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.