ரம்புக்கணை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

ரம்புக்கணை சம்பவத்தின் போது துப்பாக்கி சூட்டை நடத்த உத்தரவு பிறப்பித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்னவை அடுத்த மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

சந்தேக நபர் கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

அவருடன் மேலும் 3 கான்ஸ்டபிள்களையும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

இதன்படி 3 கான்ஸ்டபிள்களும் அடுத்த மாதம் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.