தஞ்சையில் கொடூரம் || சோளக்காட்டில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 5 பேர் கைது.!

தஞ்சை பேருந்து நிலையம் பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இளம்பெண் (22 வயது), சம்பவம் நடந்த அன்று, பனி முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த இளைஞரொருவர், ‘நானும் ஊருக்கு தான் செல்கிறேன். வாருங்கள்’ என்று தனது இருசக்கர வாகனத்தில் அந்த இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். ஒரே ஊர் என்பதால் நம்பி அந்த இளம்பெண்ணும் சென்றுள்ளார்.

அந்த நபர் சிறிது தூரம் சென்றதும், மாற்றுப்பாதையில் அந்த இளம் அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண் நீங்கள் மாற்றுப் பாதையில் அழைத்துச் செல்கிறீர்கள் என்று சத்தமிட்டு கத்தியுள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞர் அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், அருகே இருந்த சூளைகட்டுக்கு அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த இளைஞர், அவரின் இரண்டு நண்பர்களை அழைத்து வந்து, கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த பெண் தஞ்சை வல்லம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இந்த கூட்டுப் பாலியல் தொந்தரவில் பஞ்சாயத்து செய்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.