தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மின் பயன்பாடு பதிவாகியுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்!

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, வியாழக்கிழமை அன்று 38 கோடியே 70 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கோடைகாலம் தொடங்கியதால் தமிழகத்தின் மின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளால் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த மாதம் 27-ம் தேதி 17,196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதே ஒரு நாளின் அதிகப்பட்ச மின் பயன்பாடாக இருந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.