நாகை: திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். தேரானது தெற்கு வீதியில் திரும்பும் போது சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் இறந்துள்ளார். இளைஞர் தீபாராஜன் உயிரிழந்தது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது.