விஸ்வரூபம் எடுக்கும் இந்தி திணிப்பு எதிர்ப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் பரபரப்பு பேட்டி..!

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தலித் இலக்கிய மாதம் என ஏப்ரல் மாதத்தை முன்னிறுத்தி வானம் கலைத் திருவிழா எனும் தலைப்பில் கலை மற்றும் இலக்கியம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளை நீலம் பண்பாட்டு மையம் மேற்கொண்டு வருகிறது. இதன் துவக்க நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தி தேசிய மொழி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழகம் ஏற்காது என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக
இந்தி திணிப்பு விவகாரம்
தொடர்பாக ட்விட்டரில் நடிகர்கள் கிச்சா சுதீப் மற்றும் அஜய் தேவ்கன் காரசாமாக விவாதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தி திணிப்பு விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர்
பா. ரஞ்சித்
, “இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்கிறார்கள். தென் இந்தியர்களை விட, வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது.

ரசிகர்களை கேடயமாக பயன்படுத்த மாட்டேன்: நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை..!

எனவே, இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும்.திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜய் தேவ்கன் vs சுதீப் – ‘இந்தி’ குறித்து ட்விட்டரில் அனல் பறந்த விவாத போர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.