புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக ஒரே நாளில் 3,377 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கரோனாவால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,377 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,30,72,176 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதையும் சேர்த்து கரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்காக 17,801 பேர் சிகிச்சிசையில் உள்ளனர். இது நேற்று முன்தினத்தைவிட 821 அதிகம் ஆகும். கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த 2,496 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரத்து 622 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் மக்களுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 22,80,743 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 188.65 கோடியை தாண்டியுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.