காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்திச் சென்ற பெண்ணின் தந்தை உள்பட 9பேர் கைது

கரூர் அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்திச் சென்ற 9பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜல்லிபட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற காளியப்பன் மற்றும் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த கோமதி ஆகியோர் கடந்த 26ஆம் தேதி  அன்று வீட்டுக்குத் தெரியாமல் காதல்  திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மணமக்கள் கார்த்திக்கின் உறவினர் வாங்கலாயி என்பவரின் வீட்டில் தங்கினர்.

நேற்று நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது 2 ஆம்னி வேனில் வந்த மர்ம கும்பல் கார்த்திக், கோமதி இருவரையும் கடத்திச் சென்றது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மணமக்களை மீட்டதுடன் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.