லண்டன்: போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மனி முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், 54 முன்னாள் நம்பர் -1 வீரர், கிராண்டஸ்லாம், அரங்கில் 6 கோப்பை வென்றவர் 2002-ல் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய இருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இது நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது லண்டனில் வசிக்கிறார். பெக்கர் 2017-ல் தான் திவால் ஆனதாக அறிவித்தார். இவர் தனது சொத்துக்களை மறைத்து ஏமாற்றுவதாக 20 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடந்தது.
நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்க்டது. நான்கு பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திவால் வழக்கு என்பதால் தண்டனை காலத்தில் பாதி நாட்கள் மட்டும் பெக்கர் சிறையில் இருக்க நேரிடும்.
லண்டன்: போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மனி முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், 54 முன்னாள் நம்பர் -1 வீரர், கிராண்டஸ்லாம், அரங்கில் 6 கோப்பை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.