வீரர் – வீராங்கனையருக்கு கர்நாடக கவர்னர் பாராட்டு

பெங்களூரு:கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனையரை கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் சென்று வாழ்த்தினார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடக்கும் பெங்களூரு – கனகபுரா சாலையில் உள்ள ஜெயின் பல்கலைக்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று மாலை வந்தார்.கபடி, யோகா, வாள் சண்டை, ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்தார்.
வீரர் – வீராங்கனையரை உற்சாகப்படுத்தினார். வாள் சண்டையில் வென்ற வீராங்கனையருக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.கர்நாடக விளையாட்டு துறை அமைச்சர் நாராயணகவுடா, துறை கூடுதல் தலைமை செயலர் ரஜனீஷ் கோயல் ஆகியோரும் உடன் வந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.