மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்: வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் நிலையத்தில்  பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் அதிரடி சோதனை  நடத்தினர். இதில் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேமா ஜூவாலினி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் காவல்துறை தொடர்ந்து புலன் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Hyderabad: Massage centre raided, woman rescued

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கிய இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்திருக்க கூடிய உத்தரவில், மனுதாரர் காவல்துறை மீது தான் குற்றம்சாட்டுகிறாரே தவிர தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளின் போது உள்ளூர் காவல் நிலைய  அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளதாக வாதிட்ட மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் ஆய்வாளர் சோதனை நடத்தியதில் சட்ட விரோதம் இல்லை என தெரிவித்துள்ளார்.
image

எனவே, வழக்கின் விசாரணை ஆரம்பகட்டத்தில்  உள்ள நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி ஹேமா ஜுவாலினி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கணவன் – வரதட்சணை தராததால் ஆத்திரம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.