பஞ்சாபில் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்| Dinamalar

சண்டிகர்: பஞ்சாபில் வாள் கொண்டு இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக ஐ.ஜி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இங்கு பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க, பல ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு, மீண்டும் தலையெடுத்து வருகிறது. காலிஸ்தான் குழுக்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி, சிவசேனா கட்சியினர் நேற்று பாட்டியாலாவில் பேரணியாக சென்றனர். இந்த பேரணி மீது, காலிஸ்தான் ஆதரவு சீக்கிய குழுக்கள் கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, வன்முறையாளர்களை கலைத்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாட்டியாலா ஐ.ஜி., எஸ்.எஸ்.பி., எஸ்பி ஆகியார் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.