ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக இருந்த நரவானே ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்று கொண்டார்.

latest tamil news

மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் பொறியாளர் பிரிவில் பணியாற்றி வந்தார். அந்த பிரிவில் இருந்து தளபதியாகும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றார். தெற்கு பிளாக்கில், நரவானேயிடம் இருந்து பொறுப்புகளை ஏற்று கொண்ட மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாவார்.

latest tamil news

கடந்த 1982 ம் ஆண்டு டிச.,24ல் ராணுவத்தின் பொறியாளர் பிரிவில் பணியில் சேர்ந்தார். 39 ஆண்டு அனுபவம் பெற்ற மனோஜ் பாண்டே, ராணுவத்தில் பல பொறுப்புகளை வகித்துள்ளார். லடாக், பாகிஸ்தான் எல்லை, எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். இவரது மகன் இந்திய விமானப்படையில் விமானியாக உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.