ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு முதலில் பேட்டிங்

மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் டூ பிளஸிஸ் தலைமையிலன பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்க் தேர்வு செய்தது. இதன்படி, குஜராத் அணி முதலில் பந்து வீசுகிறது. 
நடப்பு தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 14 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. 
9 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி, 4-ல் தோல்வி என்று பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் உள்ளது. கடைசி இரு ஆட்டங்களில் முறையே ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம் படுதோல்வியை தழுவியது. இதனால், இன்று வெற்றிப்பாதைக்கு திரும்ப பெங்களூரு அணி முனைப்பு காட்டும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.