மே 14 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு குட் நியூஸ்!

பஞ்சாப் மாநிலத்தில் வெப்ப அலை வீசுவதன் காரணமாக, வரும் மே மாதம் 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது கோடைக் காலம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வெப்பம் அதிகமாகக் காணப்படுகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில், கோடை வெயில் கொளுத்துகிறது. மேலும் ஒருசில மாநிலங்களில், வெப்ப அலை வீசி வருகிறது.

கடந்த சில நாட்களாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வெப்ப அலை வீசுவதன் காரணமாக, வரும் மே மாதம் 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஆயிரக் கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு வரும் மே மாதம் 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.