இந்தியாவின் மிகப்பெரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, சீனாவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில்
சியோமி
நிறுவனத்தின் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சியோமி துணைத் தலைவர் மனு குமார் ஜெயினை அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி,
சியோமி இந்தியா
நிறுவனத்தின் மீது அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999-இன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
Xiaomi India
Pvt Limited நிறுவனத்தின் பெயரில் இருந்த ரூ.5,541 கோடி மதிப்பிலான பணத்தினை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நிறுவனத்தின் வங்கி கணக்கில் வைக்கப்படிருந்ததாக
அமலாக்கத்துறை
அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமலாக்கத்துறை அறிக்கை
இந்த பரபரப்பான சூழலில் இந்திய அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சியோமி நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் பணத்தை சட்டவிரோதமாக அனுப்பத் தொடங்கி உள்ளது.
நிறுவனம் 5551.27 கோடி ரூபாய்க்கு சமமான வெளிநாட்டு பணத்தை Xiaomi குழுவை உள்ளடக்கிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. ராயல்டி என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொகைகளை தாய் நிறுவனம் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களுக்கு சியோமி இந்தியா அனுப்பி உள்ளது.
இதுமட்டும் இல்லாமல், இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதுவும் தாய் நிறுவனமான Xiaomi-இன் நன்மைக்காக நடைபெற்றதாக கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம்
Xiaomi India நிறுவனமானது சீனாவில் செயல்படும் Xiaomi-இன் துணை நிறுவனமாகும். இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்சுகள், டிவிக்கள் என பல எலெக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளை விற்பனை செய்துவருகிறது.
இந்தியாவிலேயே இரண்டு தயாரிப்பு ஆலைகளை நிறுவனம் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சியோமி நிறுவனம், சமீபத்தில் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதன் பிற தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், நிறுவனத்தின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது டெக் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.