கொரோனா பரவல் அதிகரிப்பு; சீன ஹோட்டல்களில் தடை| Dinamalar

பீஜிங் : கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், சீன தலைநகர் பீஜிங்கில் ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. வர்த்தக தலைநகரான ஷாங்காயில் வேகமாக பரவிய கொரோனா தொற்று, தலைநகர் பீஜிங்கிலும் பரவி வருகிறது.

பீஜிங்கில் கடந்த ஒரு வாரத்தில், 300க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் தின கொண்டாட்டத்துக்கு சீனாவில் இன்று முதல் 4ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.விடுமுறை நாட்களில் சாப்பிடுவதற்காக ஹோட்டல்களுக்கு அதிகமான மக்கள் செல்வர். தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் ஹோட்டல்களில் 4ம் தேதி வரை சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘பார்சல்’கள் மட்டும் வழங்க ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.