நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து – ரயில் சேவைகள் பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரியானா நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

உத்தரப் பிரதேசத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று காலை 11 மணியளவில், நியூ எக்டில் ரயில் நிலையத்தின் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதனால், அந்த வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் நிறுத்தப்பட்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.