ரூ.1.68 லட்சம் கோடி வசூல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கடந்த ஏப்., மாதம் ஜி.எஸ்.டி., வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இதற்கு முன்னர் மார்ச் மாதம் வசூலான 1.42 லட்சம் கோடி தான் அதிகமாக இருந்தது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏப்., மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.1,67,540 கோடியில்
சிஜிஎஸ்டி – ரூ.33,159 கோடி
எஸ்ஜிஎஸ்டி- ரூ.41,793 கோடி
ஐஜிஎஸ்டி- ரூ.81,939 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.36,705 கோடி உட்பட)
செஸ்-ரூ.10,649 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.857 கோடி உட்பட) அடங்கும்.

latest tamil news

இந்த வசூலானது, கடந்த ஆண்டு(2021) ஏப்., மாதம் வசூலான 1.42 லட்சம் கோடியை காட்டிலும் ரூ.25 ஆயிரம் கோடி அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.