7 நாட்களில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று – பீதியில் பெற்றோர்கள்!

பாகிஸ்தானில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு குழந்தைகளுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ (இளம் பிள்ளைவாதம்) நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட போதிலும்,
பாகிஸ்தான்
, ஆப்கானிஸ்தான் போன்ற ஒருசில நாடுகளில் இன்னமும் போலியோ பாதிப்பு உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் 7 நாட்களில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மாத ஆண் குழந்தைக்கு, கடந்த மாதம் 22 ஆம் தேதி போலியோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டை சேர்ந்த மேலும் ஒரு குழந்தைக்கு நேற்று போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

2 வயது பெண் குழந்தை போலியோ வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக இஸ்லாமாபாத்தில், தேசிய சுகாதார நிறுவனத்தின் தேசிய போலியோ ஆய்வகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வாய்வழி மற்றும் ஊசி மூலம் போலியோ சொட்டு மருந்துகளை வழங்க குழு ஒன்று ஏற்கனவே அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் கிட்டத்தட்ட 15 மாதங்களாக போலியோ தொற்று இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தொற்று தலைகாட்டி இருப்பது போலியோ தடுப்பு அதிகாரிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ரம்ஜான் விடுமுறைக்காக, மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்யும் போது, வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.