சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கெய்ர் ஸ்டார்மருடன் ஒப்பிடுகையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் புகழ் பொதுமக்கள் மத்தியில் சரிந்து இருப்பது பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பிரதமருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு மத்தியில், முன்னாள் கன்சர்வேடிவ் துணைத் தலைவர் லார்ட் ஆஷ்கிராஃப்ட் நடத்திய ஆய்வு முடிவுகள் இன்று Mail செய்திதளத்தில் வெளியானது.
இதில், தொழிலாளர் கட்சியின் பிரதிநிதி கெய்ர் ஸ்டார்மருடன் ஒப்பிடுகையில் பழமைவாத கட்சியின் பிரதிநிதி மற்றும் பிரித்தானிய பிரதமருமான போரிஸ் ஜான்சனின் புகழ் பொதுமக்கள் மத்தியில் சரிந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் கெய்ர் ஸ்டார்மர் 57 சதவிகித ஆதரவும், போரிஸ் ஜான்சன் 43 சதவிகித புகழும் பொதுமக்கள் இடையே தக்கவைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் 8000 நபர்களிடம் நடத்தபட்ட இந்த மாதிரி கணக்கெடுப்பில் 55 சதவிகித பொதுமக்கள் ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் 25 சதவிகித மக்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா கால கட்டுபாடுகளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீறியது தொடர்பான மக்களின் கோபங்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகவும், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், நாட்டின் பொருளாதாரம், சுற்றுசூழல் மாற்றம், மற்றும் அத்துமீறிய குடியேற்றங்கள் பிரித்தானியாவின் முக்கிய பிரச்சனைகளாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவின் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்கும் புடின்: ரஷ்ய அரசியல் வட்டாரங்கள் பரபரப்பு தகவல்!
இந்த ஆய்வின் முடிவில் பிரித்தானியாவில் சர் கெய்ரின் புயல் தேசத்தை இன்னும் தாக்கவில்லை என்பதால் போரிஸ் ஜான்சன் ஆட்சியில் தொடர்வதில் பாதிப்பு இருக்காது என ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.