தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக திமுக அரசு இருக்கும் – முதல்வர் முக ஸ்டாலின்.!

மே தின நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்ற மரியாதை செலுத்தினார்.

இன்று சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

உழைப்பாளர்களை குறிக்கும் விதமாக மே தினத்தை ஒட்டி, சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் மே தின நினைவுச் சின்னத்திற்கு மரியாதையை செலுத்தினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில், மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாவுக்கு தடை விதித்தது குறித்தும், தொழிலாளர்களை வாழவைக்க திமுக அரசு செயல்பட்டு வருகிறது குறித்தும், பேசினார்.

அவரின் அந்த உரையில், “தொழிலாளர் நலன்களுக்காக எத்தனையோ சிறப்பான திட்டங்களை தீட்டி இருக்கிறோம். தீட்டிக்கொண்டே இருக்கிறோம். இன்னும் தீட்டப் போகிறோம். எனது தலைமையிலான அரசு தொழிலார்களுடைய அரசாகத்தான் இருக்கும். தொழிலாளிகளுடன் இருக்கும். தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அரசாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.