காது பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொலை! மூடப்பட்டிருந்த கண்கள்… உக்ரைனில் சமீபத்திய பயங்கரம்


உக்ரைனில் ரஷ்யா நேற்று நடத்திய நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட கொடூரங்கள் அம்பலமாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த நிலையில் நேற்று ரஷ்ய படைகளின் தாக்குதலில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அந்நாட்டு ராணுவ தரப்பில் கூறும்போது, நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் 17 ராணுவ கட்டமைப்புகள், உயர் துல்லிய ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டன.

உக்ரைனை அடுத்து இன்னொரு நாட்டின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர்விமானம்! இதோ அதிர்ச்சி ஆதாரம்

ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகள் சேமித்து வைக்கும் கிடங்கும் அழிக்கப்பட்டது. விமானப்படை தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

23 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது. தலைநகர் கிவ் அருகே உள்ள புச்சா நகரில் பொது மக்கள் பலர் ரஷ்ய படைகளால் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் பொதுமக்கள் 3 பேரின் உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர்கள் கூறும்போது, கொல்லப்பட்டவர்களின் கைகள் கட்டப்படிருந்தன. துணியால் கண்கள் மற்றும் வாய் மூடப்பட்டு இருந்தது. அவர்களை சித்ரவதை செய்து காது பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொன்று உள்ளனர் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.