கேரளாவில் பேருந்து, ஆட்டோ, வாடகை கார்களின் கட்டண உயர்வு..!

கேரள மாநிலத்தில் பேருந்து, ஆட்டோ, வாடகை கார்களின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அதன் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இது பற்றி ஆலோசித்த கேரள அரசு கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து, அரசு பேருந்தின் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாயாக உயர்த்துவதாகவும் அம்மாநில அரசு அறிவித்தது.

மேலும், ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 30 ரூபாயாகவும், வாடகை கார்களுக்கு 200 ரூபாயாகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.