கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பெய்த ஆலங்கட்டி மழை..

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கொளுத்திய வெயிலுக்கு மத்தியில் பலத்த ஆலங்கட்டி மழை பெய்தது.

கிருஷ்ணகிரியில் ஓசூர் அடுத்த சொக்கநாதபுரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாய நிலங்களில் பசுமைக்குடில்கள் சாய்ந்து விழுந்து பயிர்கள் சேதமடைந்தன. 

இந்நிலையில், தருமபுரியின் நகர் பகுதிகள், பென்னாகரம் சாலை, குமாரசாமி பேட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், சேலம் மாவட்டம் ஆத்தூர், கரூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.