மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகருக்கு 18 ஆண்டு ஜெயில்

திருவனந்தபுரம்:

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ஒரு அமைப்பின் பள்ளி, கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ளது. இங்கு தாளாளராக இருந்தவர் போதகர் தாமஸ் பரேக்குளம் (வயது 35). இவர் கடந்த 2017ம் ஆண்டு இங்கு தங்கியிருந்த 16 வயதான மாணவர்கள் 4 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கொட்டாரக்கரை, புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்திய தண்டனை சட்டம் 377 உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போதகர் தாமஸ் பரேக்குளம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணை கொல்லம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார்.

இதில் 3 வழக்குகளில் போதகர் தாமஸ் பரேக்குளத்துக்கு தலா 5 ஆண்டுகளும், இன்னொரு வழக்கில் 3 ஆண்டுகளும் என மொத்தம் 18 ஆண்டுகள் தண்டனை விதித்தார்.

அதோடு 4 வழக்குகளிலும் தலா ஒரு லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என மாவட்ட சட்ட சேவை ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.