யாரையும் கட்டாயப்படுத்தித் தடுப்பூசி போட முடியாது – உச்ச நீதிமன்றம்

யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட முடியாது எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதித்தது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாகக் கூறித் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் தடுப்பூசிக் கொள்கை நியாயமற்றது இல்லை என்றும், பொதுமக்களின் நலன்கருதி அரசு கொள்கையை வகுத்துச் சில நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்கெனவே நீக்காவிட்டால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.