ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை.. ராணி பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்..!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவளுக்கு குணசுந்தரி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்களின் இரண்டாவது மகள் ரமேஷுக்கு விபத்தால் மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரும் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பன்னீர்செல்வம் மற்றும் ஞானசுந்தரி தம்பதியினர் மன உளைச்சலில் தங்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டnar.  தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.