நினைவிழந்து கோமா போன்ற ஆபத்தான நிலைக்கு செல்லலாம் – எச்சரிக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்.!

உடல் உஷ்ண தாக்கத்திற்கான அறிகுறிகள் மற்றும் அதை தடுப்பது எப்படி? என்பது குறித்து, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரும், மருத்துவருமான தமிழிசை சவுந்திரராஜன் ட்வீட் செய்துள்ளார்.

அவரின் அந்த பதிவில்,

கோடை வெயிலினால் ஏற்படும் உடல்நல பாதிப்பும்,ஆபத்தும்…

உடல் உஷ்ண தாக்கத்திற்கான அறிகுறிகள்.
1.அளவுக்கதிகமான வியர்வை, நாக்கு மற்றும் தோள் வறட்சி ஏற்படுதல்,
2.மனக்குழப்பம்,பேச்சுக்குழறுதல்,தலை சுற்றல்,மயக்கம்,வலிப்பு நோய், நினைவிழந்து கோமா போன்ற ஆபத்தான நிலைக்கு செல்லலாம்.

இதை தடுப்பது எப்படி?

1.மெல்லிய பருத்திநூல் மற்றும் கதர் ஆடைகள் அணிவது,
2.தண்ணீர் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் அருந்துவது
3.அதிக வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பது, 
4.இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் வெயிலில் செல்வதை தவிர்ப்பது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.