பாளையங்கோட்டை! 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது.!

பாளையங்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி மேலப்பாளையத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கேடிசி பகுதியை சேர்ந்த பொன்கணேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தை தவறாக பயன்படுத்திய பொன்கணேஷ் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதை யாரிடமும் சொல்ல கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் சிறுமியின் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வரும் இருதய ராஜ் மகன் அருள் ராஜ் ஜோசப்பும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த தகவல் சிறுமியின் பாட்டிக்கு தெரிய வரவே அவர் இது குறித்து பாளையங்கோட்டை  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொன்கணேஷ், அருள்ராஜ் ஜோசப் இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.