"கொரோனா காலங்களில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது" – பில் கேட்ஸ் புகழாரம்

உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கோவிட் பெருந்தொற்று குறித்துப் பேசியிருந்தார். அதில் உலககெங்கிலும் உள்ள நாடுகள் எவ்வாறு இந்தப் பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார். அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர் தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் பல கிராமங்களைக் கொண்ட இந்தியா, கோவிட் பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

பில் கேட்ஸ்

மாஸ்க் பற்றிக் கூறிய பில் கேட்ஸ், “மாஸ்க் ஒரு மேஜிக் பொருள். அது அசாத்தியமானது. கோவிட் பெருந்தொற்றை சமாளிக்க தடுப்பூசிகள் மற்றும் மனிதனின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருத்துகள் தாயரிக்கப்பட்டன. ஆனால் விலை மலிவான மாஸ்க் கோவிட் பெருந்தொற்று பரவாமல் தடுக்க சிறப்பாக உதவியது. இவ்வாறு தொற்றைத் தவிர்க்கும் விலை மலிவான மாஸ்க்கை மக்கள் பயன்படுத்தாமல் தவிர்ப்பது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.