மண்ணாடிப்பட்டு கொம்யூனில் பஞ்சாயத்து| Dinamalar

திருக்கனுார்,: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மே தினத்தை முன்னிட்டு 18 இடங்களில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.சுத்துக்கேணி கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்ற பொது மக்கள் சாலை, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு, அந்தந்த துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எழில்ராஜன் தெரிவித்தார்.கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகா அர்ஜூனா, பல்வேறு துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.