வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.83 சதவீதமாக அதிகரிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி :நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதம், கடந்த ஏப்ரலில் 7.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.மும்பையை சேர்ந்த சி.எம்.ஐ.இ., எனும், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதம், கடந்த மார்ச் மாதத்தில் 7.60 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது எப்ரலில், 7.83 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, மார்ச்சில் 8.28 சதவீதமாக இருந்தது.

latest tamil news

இருப்பினும், கிராமப்புறங்களில் இது 7.29 சதவீதத்திலிருந்து 7.18 சதவீதமாக குறைந்துள்ளது.மாநிலங்களை பொறுத்தவரை, ஹரியானாவில், வேலை வாய்ப்பின்மை விகிதம், மிக அதிகமாக 34.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. இங்கு விகிதம் 28.8 சதவீதமாக உள்ளது.மந்தமான உள்நாட்டு தேவை மற்றும் விலைவாசி உயர்வு இவற்றுக்கிடையே, மெதுவான பொருளாதார வளர்ச்சி ஆகியவை காரணமாக, ஏப்ரலில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.