Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை

இலங்கை பொருளாதார நெருக்கடி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. எரிபொருள் வாங்க இலங்கைக்கு இந்தியா 200 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியா ஏற்கனவே 200 மில்லியன் டாலர் கூடுதல் கடன் வழங்கியுள்ளது என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜயசேகர் தெரிவித்தார்.

இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு உதவிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

‘இந்த கடன் வசதி மே மாதம் நான்கு சரக்கு எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்’ என இலங்கை அமைச்சர் கூறினார். இது தவிர 500 மில்லியன் டாலர் கடன் வசதி குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் இன்னும் அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். 

முன்னதாக, இந்தியாவிடமிருந்து கிடைத்த 500 மில்லியன் டாலர் கடன் வசதியில், 400 மில்லியன் டாலர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எரிபொருள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.

இந்தியா தொடர்ந்து உதவ முன்வந்தது

மீதமுள்ள 100 மில்லியன் டாலர்கள் மே மாதத்தில் இரண்டு சரக்கு எரிபொருளை வாங்க பயன்படுத்தப்படும் என்று விஜயசேகர் கூறினார். இலங்கையில் கடந்த சில மாதங்களாக அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இலங்கைக்கு உதவ இந்தியா தொடர்ந்து முன்வந்துள்ளது.

மேலும் படிக்க | போரில் வெற்றி கிடைக்காது – பிரதமர் மோடி

ஜனவரி மாதம் இலங்கைக்கு வழங்கப்பட்ட 400 மில்லியன் டாலர் இடமாற்ற வசதி நீடிக்கப்படுவதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக மே மாதத்தில் எரிபொருள் இறக்குமதி செலவு சுமார் 58 மில்லியன் டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று விஜயசேகர் கூறினார். மூன்று மாதங்களுக்கு முன்பு இதற்கு செலவழிக்கப்பட்ட 200 மில்லியன் டாலர்களாக இருந்தது. 

ஒரு பொறுப்பான அண்டை நாடு என்ற முறையில், பல உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா பல வித உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு முன்னரும் நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள் என பல அண்டை நாடுகளில் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு உதவிக்கரம் நீட்டி பெரிய அளவிலான உதவிகளை செய்த முதல் நாடாக இந்தியா இருந்துள்ளது.   

மேலும் படிக்க |தமிழக முதல்வருக்கு இலங்கை எம்.பி நன்றி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.