அரசியல் கட்சியினரால் காவல்துறையினர் எத்தனை பேர் தாக்கப்பட்டுள்ளனர்? தயாராகும் அறிக்கை

`அரசியல் கட்சியினரால் காவல்துறையினர் எத்தனை பேர் தாக்கப்பட்டுள்ளனர்’ என்பது தொடர்பான தகவல்களை அளிக்கும்படி உளவுத்துறை கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த 2019 ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் கட்சியினரால் எத்தனை காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர் என்பதை உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மண்டல காவல்துறை ஐஜிக்களுக்கும், காவல் ஆணையர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: ‘எனக்கு 66 உனக்கு 38..’ தன்னை விட குறைந்த வயது பெண்ணை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.