15 ஆண்டு ஓகே கண்மணிகளாக வாழ்ந்து காத்துவாக்குல 3 கல்யாணம் செய்த காதல் மன்னன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

போபால்: மத்திய பிரதேசத்தில் ஒரு நபர் மூன்று பெண்களுடன் 15 ஆண்டுகள் லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்துவந்த நிலையில், மூவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ள நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் கல்யாணம் பண்ணி பாரு, வீட்டை கட்டி பாரு என பழமொழி சொல்வர். ஆனால், இப்போது வீட்டை கூட கட்டிவிடலாம் போல, ஆனால் திருமணத்திற்கு பெண் கிடைப்பது தான் கடினமானதாக உள்ளது. அப்படி இருக்கையில் மத்திய பிரதேசத்தில் ஒருவர் மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட அரிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நன்பூரில் பழங்குடி வகுப்பை சேர்ந்த சமர்த் மவுரியா என்பவர் வெவ்வேறு காலக்கட்டத்தில் மூன்று பெண்களை காதலித்து வந்துள்ளார்.

latest tamil news

‛ஓகே கண்மணி’ படத்தில் காதலியுடன் லிவ்-இன் வாழ்க்கை வாழ்வது போல, கடந்த 15 ஆண்டுகளாக மூன்று பெண்களுடனும் லிவ்-இன் உறவு முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இதன்மூலமாக 6 குழந்தைகளும் பிறந்துள்ளது. ஆனால், பழங்குடியின முறைப்படி ஒருவர் திருமணம் செய்யவில்லை எனில் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என்பதால், மூவரையும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார் சமர்த் மவுரியா. அதன்படி, கடந்த ஏப்.,30ம் தேதி தனது ஆறு குழந்தைகள் முன்னிலையில் மூவரையும் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வில் அப்பகுதி மக்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.