அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை.. ஜெயவர்த்தனே வெளியிட்ட கனவு டி20 அணி!


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஜெயவர்த்தனே, தனது கனவு டி20 அணியில் இடம்பிடித்துள்ள முதல் 5 வீரர்களை அறிவித்துள்ளார்.

ஜெயவர்த்தனேவின் கனவு அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஜஸ்பிரித் பும்ரா குறித்து அவர் கூறும்போது, ‘ஒரு இன்னிங்ஸின் வெவ்வேறு கட்டங்களில் பந்துவீசக்கூடிய திறன் கொண்டவர் என்பதால், எப்போதும் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகள் தேவைப்படும் போது மற்றும் ஒரு இன்னிங்ஸை முடிக்க ஆட்கள் தேவைப்படும்போது, ஜஸ்பிரித் பும்ராவை விட சிறந்தவர் யாரும் இல்லை’ என தெரிவித்தார்.

அதே போல், நடப்பு ஐபிஎல் தொடரில் மிரட்டி வரும் பட்லர் குறித்து அவர் கூறுகையில், ‘நான் ஜோஸுடன் பேட்டிங்கைத் தொடங்குவேன். அவர் மிகவும் ஆக்ரோஷமானவர். வேகம் மற்றும் சுழல் இரண்டிலும் நன்றாக விளையாடுகிறார்.

அவர் தாமதமாக ஐபிஎல்லில் சிறந்த ஃபார்மில் இருந்தார் மற்றும் கடந்த டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடினமான சூழ்நிலைகளில் அவர் நன்றாக விளையாடினார்’ என புகழ்ந்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி குறித்து பேசிய ஜெயவர்த்தனே, கடந்த உலகக்கோப்பையில் புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசிய அப்ரிடி, ஸ்விங் செய்வதில் அதிக திறன் கொண்டவர். death ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் அவர், ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் விதமும் சிறப்பானது என தெரிவித்தார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.