மகேஷ் பாபுவிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா எனும் தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பரசுராம் இயக்கி உள்ளார் . வருகின்ற மே 12ந்தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகளில் ஒரு பாடல் காட்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, மகேஷ் பாபுவின் முகத்தில் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டாராம் .

இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, 'நடிக்கும்போது தெரியாமல் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்து விட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார். 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விசயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.