தண்ணீர் பருகுவதற்காக சொம்பில் தலையை விட்டு வெளியே எடுக்க முடியாமல் தவித்த பூனை..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டில் பூனை ஒன்று சொம்பில் மாட்டிக்கொண்டு தவிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த கீதா என்பவர் வீட்டிற்கு பூனை ஒன்று வந்துள்ளது. பின்னர் அங்கிருந்த சொம்பிற்குள் இருக்கும் தண்ணீரை பருகுவதற்காக தலையை உள்ளே விட்டது.

ஆனால் அந்த பூனையால் தனது தலையை வெளியே எடுக்க முடியவில்லை இதன் காரணமாக பூனை சொம்பில் தலையை வெளியே எடுக்க முடியாமல் தவியாய் தவித்தது.

இதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் பூனையின் தலையில் மாட்டிக் கொண்டிருந்த சொம்பை லாவகமாக அப்புறப்படுத்தி பூனையை மீட்டனர். இதனை அடுத்து பூனை அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி சென்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.