சேவைகள் வழமைக்கு: பொது மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு



பொது மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக இன்றைய தினம் தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நேற்றைய தினம் அறிவுறுத்தியிருந்தது.

கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோளாறு திருத்தம் செய்யப்பட்டு சேவைகள் வழமை போன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்தி…

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.