இந்தியாவில் ஒமைக்ரான் எக்ஸ்.இ., கொரோனா: முதல் பாதிப்பு உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: புதிய உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்றின் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஓய்ந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில், ஒமைக்ரான் வைரசின் உருமாறிய ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்று ஒரு சில நாடுகளில் பதிவானது. நம் நாட்டில் குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில், இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.

latest tamil news

இந்நிலையில், ஒமைக்ரான் எக்ஸ்.இ., தொற்றின் முதல் பாதிப்பை, ‘இன்சகாக்’ எனப்படும் கொரோனா மரபணு பகுப்பாய்வு கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால், அது எந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இது மிகவும் வேகமாக பரவக் கூடியதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.