ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு- 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தம்

ரம்பான்:
நிலச்சரிவு காரணமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள எஃகு சுரங்கப்பாதை பலத்த சேதமடைந்துள்ளது. 
இதையடுத்து ஜம்மூ -ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை சரி செய்து, நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணியில் எல்லை சாலைகள் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை சீரமைப்பிற்கு பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.