திருவனந்தபுரம்:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு அந்தமான் அருகே 6-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கேரள மாநிலத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது வருகிற 7-ந்தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் காற்றின் வேகம் 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.